மகளிர் உலக கிண்ணத்தை கைப்பற்றியது இங்கிலாந்து!
Monday, July 24th, 2017
இந்திய மகளிர் அணியுடன் நேற்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 9 ஒட்டங்களால் இங்கிலாந்து மகளீர் அணி வெற்றிப்பெற்றது
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து மகளீர் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது
அதற்கமைய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 228 ஓட்டங்களை பெற்றது
பதிலளித்த இந்திய மகளீர் அணி 48.4 ஓவர்களில் 219 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது
இதன்படி இந்த போட்டியில் இங்கிலாந்து மகளீர் அணி வெற்றிப்பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.
இந்த போட்டியில் இந்திய மகளீர் அணி இறுதி 7 விக்கட்டுக்களை வெறும் 28 ஓட்டங்களுக்கு இழந்தது.
இதன்படி, போட்டியில் வென்ற இங்கிலாந்து மகளீர் அணி 4வது முறையாகவும் உலக கிண்ணத்தைக் கைப்பற்றியது.
Related posts:
மூன்றாவது சுற்றில் ஆண்டி முர்ரே!
இரண்டாவது போட்டி இன்று : தொடரை வெல்லுமா இலங்கை!
ஐ.பி.எல் தொடர்: கைவிடப்பட்ட 49வது போட்டி !
|
|