பயிற்சிக் குழாமிலிருந்து உமர் அக்மால் நீக்கம்!
Wednesday, May 4th, 2016இங்கிலாந்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் விஜயம் செய்வதற்கு தயாராகி வரும் நிலையிலேயே அக்மாலும் ஷேஹ்ஸாத்தும் பயிற்சிக் குழாமிலிருந்து இன்ஸமாம் நீக்கியுள்ளார்.
ஷஹித் அவ்றிடியையும் புறக்கணித்துள்ள தெரிவாளர்கள், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க தீர்மானித்துள்ளனர்.
‘‘எல்லாவற்றுக்கும் மேலாக, தெரிவுக் குழு சுயாதீனமானது. கிரிக்கெட் சபை எம்மை வழிநடத்தலாம். ஆனால் தெரிவுக்குழு தாமாகவே தீர்மானங்களை எடுக்கும். பயிற்றுநர் மற்றும் தெரிவுக் குழு உறுப்பினர்களின் முன்னைய அறிக்கைகளை நான் பார்வையிட்டுள்ளேன்.
இவை குறித்து அணிக்கு பொறுப்பானவர்களிடம் கலந்துரையாடியுள்ளேன்’’ என லாகூர் கடாபி விளையாட்டரங்கில் நடைபெற்ற செய்தியாளர்களுடான சந்திப்பின்போது இன்ஸமாம் தெரிவித்துள்ளார்.
அக்மாலும் ஷேஹ்ஸாத்தும் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவர்கள் மீண்டும் திறமையை வெளிப்படுத்தும்போது அணியில் சேர்க்கப்பட வேண்டும்.என உலக இருபது 20 போட்டிகளின் பின்னர் அப்போதைய பயிற்றுநர் வக்கார் யூனிஸ் அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.
அவ்றிடியின் தலைமைத்துவம் குறித்தும் அவர் காரசாரமான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.
உலக இருபது 20 போட்டிகளுடன் தலைமைப் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்த அவ்றிடி, சர்வதேச இருபது 20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதில்லை என்ற தனது தீர்மானத்தையும் வெளியிட்டிருந்தார்.
‘‘ஒழுக்கம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அது குறித்து நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவே, ஆற்றல் வெளிப்பாடுகளைவிட ஒழுக்கம்தான் முக்கியம் என நாங்கள் கருதுகின்றோம்.
ஒழுக்கம் சார்ந்த விடயங்களில் சிக்கல்கள் நிலவினால் இந்தத் தெரிவுக் குழு கடுமையான தீர்மானங்களை எடுக்கும்’’ என அவர் மேலும் கூறியுள்ளார்.
‘‘இவ்வருடம் எமக்கு நான்கு சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளிலேயே விளையாட வேண்டியுள்ளது.
அடுத்து 14 மாதங்களில் 6 போட்டிகளே இருக்கின்றன. எனவே இந்த ஆறு போட்டிகளில் புதியவர்களுக்கு சந்தரப்பம் வழங்கவேண்டும் என நான் கருதுகின்றேன்.
ஷஹித் அவ்றிடிக்கு ஓய்வு வழங்கப்படும். அவர் உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்தால் அவர் குறித்து கட்டாயம் கவனம் செலுத்தப்படும்’’ என இன்ஸமாம் குறிப்பிட்டார்.
Related posts:
|
|