மூளாய் விக்டோறி அணி வெற்றி!

Thursday, August 9th, 2018

யாழ் கிரிக்கெட் லீக் தொடருக்கான மட்டுப்படுத்தப்பட்ட 20 ஓவர்களைக் கொண்ட துடுப்பாட்ட சுற்றுப்போட்டி கடந்த சனிக்கிழமை ஆரம்பமானது.

யுடீ விளையாட்டுக்கழகம் நடாத்தும் இத் தொடரில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் நடைபெற்ற முதல் போட்டியில் மூளாய் விக்டோறி அணி விங்ஸ் அணியை 22 ஓட்டங்களால் வெற்றிபெற்று தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மூளாய் விக்டோறி அணி 20 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் கணேஸ் – 23, பிரசாத் – 12, பிரியங்கன் – 20, டானியல் – 24, சுஜிதரன் – 10 ஓட்டங்களைப் பெற்றனர். களத்தடுப்பில் வின்சன், மைக்கல், ஜவர்சன் தலா 01 இலக்கினையும் எட்வின், ஸ்ரீபன் தலா 03 இலக்கினையும் கைப்பற்றினர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய விங்ஸ் அணி 20 ஓவர்களில் 08 இலக்குகளை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றனர். ஜெரி ஜோன்சன் 30, ஸ்ரீபன் – 14, விதுஸன் – 26 ஓட்டங்களைப் பெற்றனர்.

களத்தடுப்பில் ஐங்கரன், பிரதீஸ், கிரிசாந் தலா 02 இலக்கினையும் பிரியங்கன், கதியோன் தலா 01 இலக்கினையும் கைப்பற்றினர்.

இப் போட்டியின் மூலம் யாழ் சென்றல் விளையாட்டுக்கழகம் 9 ஆவது ஆண்டாக நடத்தி வரும் யாழ் நகரில் சிறந்த கழக அணித் தெரிவு நிகழ்விற்கு மூளாய் விக்டோறி அணி 4.50 புள்ளிகளையும் விங்ஸ் அணி 2.06 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டது.

Related posts: