நியுசிலாந்து ரக்பி அணி அறையில் இரகசியம் கேட்கும்கருவி: இரகசியம் கசிந்ததா?
Saturday, August 20th, 2016நியுசிலாந்து ரக்பி அணி தங்கியிருந்த ஹோட்டல் அறையில் ஒட்டுக்கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்தது தொடர்பாக ஆஸ்திரேலிய காவல்துறையினர் புலனாய்வு மேற்கொள்ள இருக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவின் தேசிய அணியான த வால்லபீஸூக்கு எதிராக விளையாடுவதற்காக சிட்னியில் ஆல் பிளேக்ஸ் அணி தங்கியிருந்த அறையில் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டபோது இந்தக் கருவி இருந்தது கண்டறிந்தது. நியுசிலாந்து ஹெரல்டு செய்தித்தாளில் வெளியான அறிக்கையின்படி, அந்த கருவி இருக்கை ஒன்றின் பஞ்சுக்குள் தைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் பிளிடிஸ்லேய் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி சனிக்கிழமை தொடங்குவதற்கு முன்னர் இந்தச் செய்தி வந்திருக்கிறது. கடந்த 13 ஆண்டுகளாக இந்த போட்டியில் ஆஸ்திரேலியா ஒரு முறை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடுத்த ஐ.பி.எல் தொடர் ஏப்ரல் 5இல் ஆரம்பம்!
Northern challengers உதைப்பந்தாட்ட போட்டி 3வது சுற்றில் விடத்தல்தீவு ஜக்கியம்!
அமீரிடம் கால்பந்து கையளிப்பு!
|
|