ஐ.சி.சி அதிரடி : இலங்கையின் உறுப்புரிமை பறிபோகும் ஆபத்து!

Tuesday, July 3rd, 2018

எதிர்வரும் 6 மாத காலப்பகுதிக்குள், இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தலை நடத்தாதுபோனால் பேரவையின் உறுப்புரிமை தொடர்பில் மீள்பரிசீலனை செய்யவேண்டிய நிலையேற்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை எச்சரித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஐந்து நாள் வருடாந்த அமர்வு அயர்லாந்து டப்லினில் நிறைவடைந்தது. இதில் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சரை பிரதிநிதியாக அமர்ந்து கண்காணிப்பாளராக செயற்பட சர்வதேச கிரிக்கெட் பேரவை இணக்கம் வெளியிட்டது.
எனினும் 6 மாத காலத்துக்குள் தேர்தலை நடத்தாதுபோனால் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்புரிமை குறித்து மீள்பரிசீலனை செய்யப்படும் என்று பேரவை எச்சரித்தது.
கிரிக்கெட்டின் பல பில்லியன் பார்வையாளர்களுக்கு கிரிக்கெட்டின் இறைமை குறித்து சந்தேகம் வராத வகையில் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் சசாங் மனோஹர் தெரிவித்துள்ளார்.

Related posts: