படகுச் சேவை  நிறுத்தம்: மாணவர்கள் போராட்டம்: தவிசாளர் தலைமறைவு!

Friday, September 14th, 2018

நெடுந்தீவிலிருந்து செயற்பட்டு நிகழ்வுக்கு யாழ்ப்பாணத்துக்கு செல்லவிருந்த மாணவர்கள் படகுச் சேவை நடைபெறாமையால் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது ஏமாற்றமடைந்த சம்பவமொன்று இன்று நெடுந்தீவு பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

நெடுந்தீவுப் பாடசாலைகளில் இருந்து, யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற செயற்பாட்டு மகிழ்வோம் நிகழ்வுக்கு செல்வதற்காக புறப்பட்ட மாணவர்களே இவ்வாறு காத்திருக்க நேரிட்டுள்ளது.

நெடுந்தீவு கோட்டக் கல்விப் பணிமனை மாணவர்களின் போக்குவரத்துக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யாமையே மாணவர்கள் காலையிலிருந்து நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிள்ளது என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஆளுமையற்ற நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளரது அசமந்தப் போக்கும் இவ்வாறு குழப்ப நிலை ஏற்படக் காரணமாக அமைந்ததென்றும் குற்றம் சாட்டிய மாணவர்களின் பெற்றோர் பிரதேச செயலகம் முன்பாக ஒன்றுகூடி நியாயம் கேட்டு போராட்டம் ஒன்றை மேற்கொண்டும் உள்ளனர் என தெரியவருகின்றது.

 

Related posts: