தொடரை முழுமையாக இழந்தது இலங்கை அணி!
Sunday, June 27th, 2021இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் டேவிட் மாலன் 76 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் துஸ்மந்த சமீர 4 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.
00
Related posts:
டு ப்ளசிஸ்க்கு அபராதம்!
பாசிலோனாவிற்காக 100 கோல்கள் அடித்த நெய்மர் சாதனை!
முழுத் திறமையையும் வெளிப்படுத்துவேன் - முஹமட் சிராஷ் !
|
|