கோலூன்றிப் பாய்தலில் மகாஜனாக் கல்லூரி மாணவி புதிய சாதனை!

Thursday, September 15th, 2016

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவியான அனித்தா கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனையை படைத்துள்ளார்.

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி கல்வி பயிலும்  ஜே. அனித்தா என்ற மாணவியே இலங்கை கோலூன்றிப் பாய்தலுக்கான சாதனையை புதுப்பித்துள்ளார்.

இவர் 3.35 மீற்றர் உயரத்திற்கு கோலூன்றிப் பாய்ந்து ஏற்கனவே இருந்த சாதனை புதுப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சேர்.ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இப் போட்டியிலேயே குறித்த சாதனை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

fsffa

Related posts: