பாகிஸ்தானுக்குச் செல்ல இலங்கை அணி தீர்மானம்!

Sunday, August 20th, 2017

பாகிஸ்தானுக்­குச் சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்டு ஓர் ரி-–20 ஆட்­டத்­தில் விளை­யா­டு­வ­தற்கு இலங்கை கிரிக்­கெட் சபை சம்­ம­தம் தெரி­வித்­துள்­ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்­தா­னில் சுற்­றுப்­ப­ய­ ணம் மேற்­கொண்டு விளை­யா­டிய போது, லாகூ­ரில் வைத்து அவர்­கள் பய­ணித்த பேருந்து மீது ஆயு­த­தா­ரி­கள் துப்­பாக்­கிச் சூடு நடத்­தி ­னர். இலங்கை வீரர்­கள் எவ­ரும் சாவ­டை­ய­வில்லை.

சிலர் காய­ம­டைந்­த­னர். இதற்­குப் பின்­னர் பாகிஸ்­தா­னுக்­குச் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொள்ள ஏனைய அணி­கள் பின்­ன­டிப்­புச் செய்­கின்­றன. சிம்­பாப்வே மட்­டும் ஒரு­முறை பாகிஸ்­தா­னுக்­குச் சென்று விளை­யா­டி­யுள் ளது. அங்கு சென்ற சிம்­பாப்வே அணிக்கு வர­லாறு காணாத பாது­காப்பை பாகிஸ்­தான் அர­சும், கிரிக்­கெட் சபை­யும் ஏற்­ப­டுத்­தி­க் கொடுத் தது.

சிம்­பாப்வே அணி சுற்­றுப் பய­ணம் செய்த கார­ணத்­தால் ஏனைய அணி­க­ளும் தமது மண்­ணுக்கு வரும் என்று பாகிஸ்­தான் அழைப்பு விடுத்­தி­ருந்­தது. எனி­னும் அந்த அழைப்பு பொய்த்­துப் போனது.

இலங்­கைக்­கும் ஏற்­க­னவே அழைப்பு விடுக்­கப்­பட்­டது. இலங்கை கிரிக்­கெட் சபை அந்த அழைப்பை நிரா­க­ரித்­தி­ருந்தது. தற்­போது, ஓர் ரி-–20 ஆட்­டத்­தில் விளை­யாட உடன்­பாடு தெரி­வித்­துள்­ளது. பெரும்­பா­லும் எதிர்­வ­ரும் செப்­ரெம்­பர் மாதம் அந்த ஆட்­டம் நடை­பெ­ற­லாம் என்று எதிர்­பார்க்கப்படுகிறது.

Related posts: