கிரிக்கட் சபை தேர்தல் – சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற நடவடிக்கை!
Saturday, January 5th, 2019கிரிக்கட் சபை தேர்தல் தொடர்பில் மேன்முறையீட்டு குழு நியமனம் பற்றி சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற எதிர்பார்த்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கட் சபை தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 07ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
தற்போது தேர்தல் குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ள வேட்பு மனுக்கள் தொடர்பிலான எதிர்ப்புக்களை ஜனவரி 7ம் திகதி சமர்ப்பிக்க முடியும்.
அதனுடன் தொடர்புடைய விசாரணைகள் எதிர்வரும் 11 ம் மற்றும் 12ம் திகதிகளில் இடம்பெறும் என கிரிக்கட் தேர்தல் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
அதன்படி , ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்களில் பெயர் பட்டியல் 14ம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இந்திய அணியிலிருந்து விலக்கப்பட்ட பிரபல வீரர்!
உலக பெட்மிண்டன் தரவரிசையில் சய்னா நேவால் முன்னேற்றம்!
தேசியமட்ட கூடைப்பந்தாட்டத் தொடரில் யாழ். மாவட்ட அணி மீண்டும் சம்பியன்!
|
|