தொடரிலிருந்து விலகிய தெம்பா புவாமா!

Wednesday, February 19th, 2020

அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் தெம்பா புவாமா விலகியுள்ளார்.

தோளில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்றாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின் போது அவருக்கு உபாதை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவுஸ்ரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலாக முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: