ஒரு ஓவரில் 7 சிக்ஸர்களை விளாசி உலக சாதனை படைத்த இலங்கையின் இளம் வீரர்
Saturday, December 16th, 2017ஒரு ஓவரில் மட்டும் 7 சிக்ஸர்கள் விளாசி இலங்கையின் இளம் வீரர் ஒருவர் புதிய உலகசாதனை ஒன்றைப் படைத்துள்ளார். பலபிட்டிய,ரேவேத கல்லூரியின் நவிந்து பஹசரா என்ற 15 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடும் வீரரே இந்த சாதனை படைத்துள்ளார்.
முரளி நல்லிணக்க கிண்ண இறுதி போட்டியின் போதே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார்.
விவ்வியன் ரிச்சர்ட்ஸ் ,ரவி சாஸ்திரி ஆகியோர் முதல்தர கிரிக்கட் ,போட்டிகளிலும் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கட்டிலும் ஆறு சிக்ஸர்களை ஒரே ஓவரில் விளாசியுள்ளார்கள். முறையற்ற பந்து அடங்கலாக மொத்தமாக 7 சிக்ஸர்கள் விளாசி புதிய சரித்திரத்தை படைத்துள்ளார்
Related posts:
10,000 ஓட்டத்தை தவறவிட்ட குக்!
பும்ராவை தேடிச் சென்ற தாத்தா சடலமாக மீட்பு!
முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி வெற்றி!
|
|