இலங்கை அணியின் தலைவராக தொடர்ந்தும் உபுல் தரங்க!
Tuesday, February 7th, 2017இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான ரி-ருவன்ரி போட்டிக்கு உபுல் தரங்க தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை விடுத்துள்ள செய்தியிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த தொடரில் முன்னாள் அணித்தலைவர் மெத்தியுஸ் விளையாட மாட்டார் எனவும் குறிப்பிடப்படுகின்றது. தென்னாபிரிக்காவுடனான போட்டியின் போது மெத்தியுஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த ரி-ருவன்ரி போட்டிகளில் தினேஸ் சந்திமால் அணியின் தலைவராக செயற்பட்டார்.
தற்போது நடைபெறும் ஒரு நாள் போட்டிக்கு உபுல் தரங்க தலைவராக செயற்படுகின்ற நிலையில் இந்த மாத இறுதியில் இடம்பெறவுள்ள அவுஸ்ரேலிய அணியுடனான போட்டிக்கும் அவரே தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|