இந்தியன் பிறீமியர் லீக்: உரிமையாளர்களுக்கு இடையில் முறுகல்!
Thursday, November 23rd, 2017
வெளிநாட்டு வீரர்களை உள்ளீர்ப்பது தொடர்பில் ஐ.பி.எல். போட்டித் தொடரின் அணிகளது உரிமையாளர்களுக்கு இடையில், முறுகல் நிலை தோன்றியுள்ளதாக இந்தியாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
5 வெளிநாட்டு வீரர்களை உள்ளீர்க்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸின் உரிமையாளர் கோருகின்ற போதும், ஏனைய அணிகள் சில அவ்வாறான கட்டுப்பாட்டை நீக்கவும், சில அணிகள் மெச் கார்ட் முறை எனப்படும் ஒவ்வொரு போட்டிக்குமான வீரர்கள் தெரிவின் அடிப்படையில் இந்த உள்ளீர்ப்பை நடத்துமாறும் வலியுறுத்துகின்றன
இதுதொடர்பில் இடம்பெற்ற கூட்டத்தில் எந்த தீர்வும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தமுறை ஐ.பி.எல். அணிக்கான வீரர்களது ஏல நிகழ்வை இங்கிலாந்தில் நடத்த வேண்டும் என்று சில அணிகள் முன்வைத்த யோசனையை ஏனைய அணிகள் மறுத்துள்ளன. எவ்வாறாயினும் அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இந்த ஏல நிகழ்வு நடத்தப்படவுள்ளது.
Related posts:
|
|