தென்னாபிரிக்க அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ரஸல் டொமிங்கோ மீண்டும் விண்ணப்பம்!

Thursday, July 6th, 2017

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு  தற்போதைய பயிற்சியாளர் ரஸல் டொமிங்கோ மீண்டும் விண்ணப்பித்துள்ளார். ரஸல் டொமிங்கோவின் பதவிக்காலம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் அவர் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு ரி-ருவன்ரி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு மூன்று வகை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இவரது பயிற்சியின் கீழ் டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தை பிடித்திருந்த அதேவேளை கடந்த 2015இல் நடைபெற்ற 50 ஓவர்களை கொண்ட உலகக்கோப்பை தொடரில்  அரையிறுதிக்கு முன்னேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: