இந்தப்போட்டி  விஷேடமான ஒன்று  – ரகானே

Monday, October 10th, 2016

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் அடித்த சதத்தை மறக்கவே முடியாது. இந்த போட்டி எனக்கு மிகவும் ஸ்பெசலான ஒன்று என இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரகானே தெரிவித்துள்ளார்.

மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. இந்நிலையில் முதல் இரண்டு போட்டிகள் முடிவு பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி இந்தூரில் நடந்து வருகிறது.

முதல் 2 டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியுள்ள இந்தியா, இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற சிறப்பாக ஆடிவருகிறது.இந்நிலையில், முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, முதல் இன்னிங்சில், 3 விக்கெட்டுக்கு 267 ஓட்டங்கள் எடுத்திருந்தது. கோஹ்லி (103), ரகானே (79) ஆடமிழக்காமல் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, இரண்டாவது நாள் ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய ரகானே 188 ஓட்டங்கள் எடுத்து டெஸ்ட் ஆட்டத்தில் தனது அதிகபட்ச ஓட்டங்களை பதிவு செய்துள்ளார்.இரண்டாவது நாள் ஆட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரகானே இந்த டெஸ்ட் போட்டி எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று எனவும், இந்த சதத்தை தன்னால் நீண்ட நாட்களுக்கு மறக்க முடியாது என இந்திய கிரிக்கெட் வீரர் ரகானே தெரிவித்துள்ளார்.

மேலும், அணித் தலைவர் விராட்கோஹ்லி எனக்கு சிறந்த அறிவுரைகளை வழங்கினார். இது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

RH_Crick-1

Related posts: