இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் : அடுத்த சுற்றுக்கு சானியா ஜோடி !

Monday, March 13th, 2017
இண்டியன் வெல்ஸ் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, இந்தியாவின் சானியா மிர்சா – பார்போரா ஸ்டிரைகோவா (செக்.) ஜோடி தகுதி பெற்றது.
இரண்டாவது சுற்றில் இத்தாலியின் சாரா எர்ரானி – அலிக்ஜா ரோசோல்ஸ்கா (போலந்து) ஜோடியுடன் நேற்று மோதிய சானியா ஜோடி 6-2, 6-3 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று கால் இறுதிக்கு முன்னேறியது.
மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட முன்னணி வீராங்கனைகள் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), மேடிசன் கீஸ், லாரன் டேவிஸ் (அமெரிக்கா), நவோமி ஒசாகா (ஜப்பான்), கிறிஸ்டினா மிளாடெனோவிச் (பிரான்ஸ்), சிமோனா ஹாலெப் (ரோமானியா), எலினா வெஸ்னினா (ரஷ்யா) ஆகியோர் தகுதி பெற்றனர்.
நம்பர் 1 வீரர் அதிர்ச்சி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரர் ஆண்டி மர்ரே (இங்கிலாந்து) 4-6, 6-7 (5-7) என்ற நேர் செட்களில் கனடாவின் வாசெக் பாஸ்பிசிலிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். பாஸ்பிசில் உலக தரவரிசையில் 129வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றொரு 2வது சுற்றில் இத்தாலியின் பேபியோ பாக்னினி 7-6 (7-4), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோ வில்பிரைடு சோங்காவை (பிரான்ஸ்) வீழ்த்தினார். ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் – மார்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா) ஜோடி 3-6, 4-6 என்ற நேர் செட்களில் கில்லஸ் முல்லர் (லக்சம்பர்க்) – சாம் குவெரி (அமெரிக்கா) ஜோடியிடம் தோற்றது.

Related posts: