மூவருக்கும் மீண்டும் வாய்ப்பு!

Wednesday, May 2nd, 2018

போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவின் கிரிக்கட் வீரர்களான ஸ்டீவன் சுமித், டேவிட் வோர்னர் மற்றும் கமரன் பென்க்ராஃப்ட் ஆகியோர், மீண்டும் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில்விளையாட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கட் தலைவர் ஜேம்ஸ் சதர்லேண்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.குறித்த மூன்று பேரும் பந்தினை சேதப்படுத்தியக் குற்றத்துக்காக தடையை அனுபவித்து வருகின்றனர்.

அவர்கள் இந்த தடைக்காலத்தில் தங்களது திறமையை நிரூபித்து, அவுஸ்திரேலிய அணிக்கு அவர்களின் பங்களிப்பு தேவை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்தால் தடைக்காலம் நிறைவடைந்தப் பின்னர், அவர்களுக்கு மீண்டும் அணியில் இடமுண்டு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

எவ்வாறாயினும், அணித்தலைவர் பதவி விடயத்தில் ஸ்டீவன் சுமித் அல்லது டேவிட் வோர்னருக்கு மீண்டும் வாய்ப்பு இருக்கிறதா? என்பதை தம்மால் கூற முடியாது என்றும் ஜேம்ஸ்சதர்லேண்ட் தெரிவித்துள்ளார்.

Related posts: