இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா!

Monday, June 26th, 2017

மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை 35ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நாணய சுழற்சியை வென்ற வென்ற இங்கிலாந்து அணி முதலில் கலத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் மூன்று பேர் இங்கிலாந்து பந்து வீச்சை வெற்றியகரமாக ஆடி ஓட்டங்களை குவித்தனர்.

தொடக்க ஜோடியான பூனம் ராவத் 86 ஓட்டமும்; ஸ்மிரிதி மன்தானா 90 ஓட்டங்களையும் எடுத்து அசத்தினார்கள். அடுத்ததாக களம் இறங்கிய கேப்டன் மித்தாலி ராஜ் 71 ஓட்டங்களை குவிக்க 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா 281 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

282 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியினர்இ இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார்கள்.

தொடக்க ஆட்டக்காரர்களான பூமன்ட் 14 இ டெய்லர் 22 என குறைவான ஓட்டங்களில் ஆட்டமிழக்க 11 ஓவர்களில் 42 ஓட்டங்களை இங்கிலாந்து கைப்பற்றியது.அடுத்து களமிறங்கிய நைட் 46 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.ஐந்தாவதாக மட்டை பிடித்து ஆடிய வில்சன் மட்டும் நிலைத்து நின்று ஆடி 81 ஓட்டங்கள் எடுத்தாலும்ஆட்டமிழந்து வெளியேற இங்கிலாந்து தோல்வி ஏறக்குறைய உறுதியாகியது.மொத்தம் 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து இங்கிலாந்து 246 ஓட்டங்களை எடுத்தது.2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தன்னுடைய முதலாவது வெற்றியை தன்வசப்படுத்தியது.

Related posts: