வடக்கின் “கரம்” சம்பியன் ஆனார் வேலணை மத்தியின் மாணவிவிதுர்ஷினி!
Sunday, June 14th, 2026
….
வடமாகாண மட்ட திறந்த கரம் போட்டியில் யாழ் மாவட்ட அணி சார்பில் ஒற்றையர் ஆட்டத்திலும் குழு போட்டியிலும் கலந்து கொண்ட ஜெ.விதுர்ஷினி இவ் வருடத்திற்கான (2026) வடமாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதே போன்று குழு போட்டியிலும் கலந்துகொண்டு வடமாகாண அணிக்கு தனது திறமையை வெளிப்படுத்தி அணி சம்பியன்னாவதற்கும் பங்காற்றியுள்ளார்.
முன்பதாக கடந்த 18.04.2026 நடைபெற மாவட்ட மட்ட கரம் போட்டியில் வேலணை பிரதேச செயலகம் சார்பில் கலந்து கொண்டு மாவட்டமட்ட போட்டியில் வெற்றி பெற்று யாழ் மாவட்ட அணியில் இடம் பிடித்திருந்த ஜெ.விதுர்ஷினி,
நேற்றயதினம் (13.06.2026) யாழ் இந்துக் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற மாகாணமட்ட போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் நடைபெறவிருக்கும் தேசிய மட்ட போட்டியில் வடமாகாணம் சார்பாக கலந்து கொள்ளவுள்ளார்.
இவ் வெற்றியானது யா/ வேலணை மத்திய கல்லூரிக்கும், வேலணை பிரதேசத்திற்கும், தீவக மண்ணிற்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.
இதேவேளை கரம் போட்டியில் தீவகமண்ணை சார்ந்த வீரரொருவர் வடமாகாண அணியில் பங்கோற்று தேசியமட்ட போட்டியில் கலந்து கொள்வது இதுவே முதற்தடவையாகும்.
பாடசாலையின் முதல்வர் இ.ஹஸ்ரன் றோய் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் அ. றொ. அனோஜன் ஆகியோர் குறித்த மாணவியின் வெற்றிக்கு மிக உறுதுணையாக இருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
அவர்களுக்கும் மற்றும் கல்லூரியின் மதிப்புக்குரிய ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கல்லூரி சமூகம் சார்ந்த நன்றிகள்
Related posts:
|
|
|


