இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி தலைவர் சார்லோட் ஓய்வு

Friday, May 13th, 2016

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவர் சார்லோட் எட்வர்ட்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்றுமுன்தினம் அறிவித்துள்ளார்.

1996ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணியின் அறிமுகம் ஆன சார்லோட் எட்வர்ட்ஸ் கடந்த 10 ஆண்டுகளாக அணித்தலைவராக இருந்தார்.

அவரது தலைமையில் இங்கிலாந்து அணி 2009ஆம் ஆண்டில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியது. 36 வயதான சார்லோட் 23 டெஸ்ட், 191 ஒருநாள், 95 இருபது ஓவர் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி இருக்கிறார்.

சமீபத்தில் இந்தியாவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி அரை இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டு வெளியேறியது. வீராங்கனைகள் போதிய உடல் தகுதியுடன் இல்லாததே தோல்விக்கு காரணம் என்று பயிற்சியாளர் மார்க் ராபின்சன் விமர்சித்து இருந்தார்.

அடுத்த ஆண்டு (2017) இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை போட்டி வரை விளையாட முடிவு செய்து இருந்த சார்லோட், பயிற்சியாளரின் விமர்சனத்தை தொடர்ந்து விலகல் முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. உள்ளூர் மற்றும் லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று சார்லோட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

Related posts: