இங்கிலாந்துக்கு பயணமாகவுள்ள பாகிஸ்தான் அணி !
Saturday, June 27th, 2020
கொரோனா தொற்றுறுதியான 10 வீரர்கள தவிர்ந்த ஏனைய 18 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கட் அணி குழாம் நாளையதினம் இங்கிலாந்துக்கு பயணமாகவுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையில் 3 டெஸ்ட் போட்டிகளையும், மூன்று 20 க்கு 20 போட்டிகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஜுலை 30 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதிவரை பார்வையாளர்கள் அற்ற அரங்கில் இந்தத் தொடர் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், கொவிட்-19 தொற்றுறுதியான 10 வீரர்களுக்கு மூன்றாவது கட்ட பரிசோதனையில், தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அவர்களையும் தொடரில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இந்திய தடுப்புச்சுவர் டிராவிட்டையே கதிகலங்க வைத்த ஒரு பந்துவீச்சாளர்!!
சர்வதேச கிரிக்கெட்டில் சவாலாக விளங்கிய பந்துவீச்சாளர் - டோனி!
மூன்றாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது!
|
|
|


