சர்வதேச கிரிக்கெட்டில் சவாலாக விளங்கிய பந்துவீச்சாளர் – டோனி!

Friday, June 9th, 2017

சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கு சவாலாக விளங்கிய பந்துவீச்சாளர் யார் என்ற கேள்விக்கு இந்தியாவின் முன்னாள் அணித்தலைவர் டோனி பதில் அளித்துள்ளார்.

மினி உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இங்கிலாந்தில் விராட் கோஹ்லியின் தொண்டு நிறுவனம் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது ரசிகர் ஒருவர் டோனியிடம், ”நீங்கள் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்பில் உள்ளீர்கள். எனவே உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். டக்வொர்த்லீவிஸ் விதிகள் உங்களுக்கு புரிகிறதா?” என்று வினவினார்.

ரசிகரின் கேள்விக்கு கேலியாக பதிலளித்த டோனி, ஐசிசிக்கு கூட இந்த விதிகள் பற்றி தெரிந்து இருக்கும் என்று நான் கருதவில்லை” என்றார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நீங்கள் எதிர்கொண்ட பந்துவீச்சாளர்களில் மிகவும் கடினமான பந்து வீச்சாளர் யார் என்ற கேள்விக்கு, எனக்கு உள்ள குறைந்த அளவு நுணுக்கங்களை வைத்து பார்க்கும் போது அனைத்து வேகப்பந்து பந்துவீச்சாளர்களும் சவாலானவர்கள்தான்.

இதையும் மீறி ஒருவரை குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், நான் ஷோயப் அக்தரைத்தான் குறிப்பிடுவேன். ஏனெனில், அவர் அதிவேகமாக பந்து வீசக்கூடியவர். அவரால் யார்கர் வீச முடியும், பவுன்சர் பந்தையும் அவர் வீசுவார், ஆனால், பீமர் பந்தை அவரிடம் எதிர்பார்க்க முடியாது. அக்தரின் பந்து வீச்சை கணிப்பது கடினம் என்றார்.

Related posts: