ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு!
Friday, November 18th, 2016
ஆசிய கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் உத்தேச அணி விபரம், இலங்கை கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
15 பேர் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியாக ஹசினி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். சமரி பொல்கம்பொல மற்றும் அசினி குலசூரிய ஆகியோருக்குப் பதிலாக எஷாணி லொகுசூரிய, யசோதா மென்டிஸ் மற்றும் உதேஷிகா ப்ரோபோதினி ஆகிய வீராங்கனைகள் புதிதாக அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின் விபரம் பின்வருமாறு,
ஹசினி பெரேரா (அணித் தலைவி), பிரஷாதினி வீரக்கொடி (உப அணித் தலைவி), சாமரி அத்தப்பத்து, சிறிபாலி வீரக்கொடி, சுகந்திகா குமாரி, டினாலி மனோதரா, நிலக்ஷி சில்வா, நிபுனி ஹன்சிஹா, இநோக்கா ரணவீர, ஒசாடி ரணசிங்க, எசானி லொக்குசூரிய, யசோதா மெண்டிஸ், ஹன்சிமா கருணாரத்ன, அமா காஞ்சனா, உதேசிகா பிரபோதினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மகளிருக்கான ஆசியக் கிண்ணம் 2016 போட்டிகள் தாய்லாந்தில் இம் மாதம் 24ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|