அடுத்த சுற்றுக்கு இங்கிலாந்து – பங்களாதேஸ் தகுதி!

Sunday, June 11th, 2017

இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் செம்பியன் கிண்ண போட்டித் தொடரில் நேற்று இடம்பெற்ற 10 வது போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூயிஸ் அடிப்படையில் 40 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துஇதற்கமைய முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை பெற்றது

பதிலித்த இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 240 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதுஇதன்படி, டக்வத் லுயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 40 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கட்டது

இதன்படி, பிரிவு ஏ யில் இருந்து அவுஸ்ரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஸ் அகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனஇதனிடையே இன்றைய தினம் இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெறவுள்ளது

Related posts: