அடுத்த உலகத்தின் கதவு திறக்கப்பட்டுவிட்டதா?

Wednesday, January 4th, 2017

ஒவ்வொரு மனிதனும் எந்தளவிற்கு பூமியை பதம் பார்க்க முடியுமோ இந்த அளவிற்கு தங்களது தேடுதல்களை முன்னெடுக்கின்றனர். இன்னுமொரு உலகம் கிடைக்காதா? என்ற எண்ணத்தில் தீவிர தேடுதலை மேற்கொண்டு மற்றுமொரு பூவுலகை கண்டுப்பிடித்திருப்பது தான் ‘பிராக்ஸிமா பி’எனும் புதிய வையகம்.

பூமியிலிருந்து 4.25 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பிராக்ஸிமா சென்டாரி எனும் நட்சத்திர மண்டலத்தில் அமைந்துள்ள கோள் தான், மனிதர்கள் வாழக் கூடிய இரண்டாவது உலகம் என ஆராய்ச்சியாளர்கள் சத்தியம் செய்யும் பிராக்ஸிமா பி ஆகும்.

கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து பின் தொடர்ந்தாலும் பிராக்ஸிமா அவ்வளவு எளிதாக வானியலாளர்களுக்கு பிடி கொடுத்துவிடவில்லை.

பேல் ரெட் டாட் (Pale red dot) எனும் இந்தத் திட்டம் தொடர்பான ஆராய்ச்சியில் ஏறத்தாழ 4 ஆண்டுகளை செலவழித்து பிராக்ஸிமாவின் சிக்னல்களைக் ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

பூமியைவிட 1.3 மடங்கு பெரியதாக உள்ள பிராக்ஸிமா பாறைக் கோளமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

தன் நட்சத்திரத்திலிருந்து 75 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள வட்டப் பாதையில் சுற்றி வருகின்றது. இதனை முழுமையாக சுற்றி முடிக்க 11.2 நாட்களை எடுத்துக்கொள்கின்றது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தொலைவில் இது 5 சதவிகிதத்திற்கும் குறைவானதாகும். சூரியனிலிருந்து பல லட்சம் ஆண்டுகள் தள்ளியிருப்பதால் பிராக்ஸிமா குளிர்மையாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கோளின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆக இருப்பதால், திரவநிலையில் நீர் இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள்.

சூரியனிலிருந்து தொலைவில் அமைந்துள்ளதால் எக்ஸ்ரே மற்றும் புற ஊதாக்கதிர்கள் உள்ளிட்டவற்றின் தாக்கம் இருக்காது.

செவ்வாய்க் கோளை விட சாதகமான சூழல் பிராக்ஸிமாவில் நிலவ வாய்ப்பு உள்ளது என தம்ஸ் அப் காட்டி பேசுகிறார் நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இக்னஸ் ஸ்நெல்லன்.

கடந்த 2003 முதல் 2009ம் ஆண்டு வரை சிலியில் உள்ள பாரனால் ஆய்வு மையத்திலிருந்து பிராக்ஸிமா கோளை பின்தொடர்ந்து தகவல்களைத் திரட்டி வந்தாலும், அதனை புதிய கண்டுபிடிப்பாக உறுதிப்படுத்த முடியாமல் தவித்த ஆய்வாளர்கள், 2013ம் ஆண்டுதான் உறுதியான முடிவுக்கு வந்தனர்.

அத்துடன் லா சில்லா ஆய்வு மையத்தில் 60 நாட்கள் இரவு முழுக்க பிராக்ஸிமா கோளை கண் துஞ்சாது கண்காணித்து, அதனை புதிய கண்டுபிடிப்பு என பேல் ரெட் டாட் திட்டத்தைச் செயல்படுத்திய டுயோமி குழுவினர் உறுதிப்படுத்தினர்.

மனிதர்கள் வாழும் சூழ்நிலை கொண்ட வேறு கோள்களைத் தேடிக் கண்டுபிடிப்பதாகும். அந்த வகையில் இன்னொரு பூமியான பிராக்ஸிமா பி கோளின் கண்டுபிடிப்பு முக்கியமான ஒரு விடயமாகும்.

world-945

Related posts: