GCE A/L பரீட்சை பெறுபேறுகள் விரைவில்!

Friday, December 22nd, 2017

2017ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 8ம் திகதி முதல் செப்டம்பர் 4ம் திகதி வரை இடம்பெற்ற உயர்தரப்பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 37 ஆயிரத்து 943 பேர் உள்வாங்கப்பட்டனர்.

இதேவேளை,77ஆயிரத்து 284 தனியார் பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றியமை குறிப்பிடத்தக்கது.நாடாளாவிய ரீதியில் 2230 மத்திய நிலையங்கள் மற்றும் 305 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களின் கீழ் இந்த பரீட்சை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: