8 கோடி செலவில் இலங்கையின் முதலாவது விவசாய மாதிரிக் கிராமம் அபிவிருத்தி!

Wednesday, July 4th, 2018

இலங்கையின் முதலாவது விவசாய மாதிரிக் கிராமமாக ஹப்புத்தளை கஹத்தேவல கிராமம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இந்த அபிவிருத்திக்காக எட்டுக் கோடி ரூபா செலவிடப்படும் என்று விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கிராமத்தில் வாழும் 164 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு வேலைத்திட்டங்கள் அங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

எதிர்வரும் 21ஆம் திகதி அமைச்சர் அமரவீர தலைமையில் இந்த அபிவிருத்திப் பணி இடம்பெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Related posts: