பேருந்துகளை திருத்த 3000 மில்லியன்!
Thursday, August 18th, 2016பழுதடைந்துள்ள நிலையிலுள்ள ஆயிரம் பபேருந்துகளை மீள் திருத்தம் செய்து போக்குவரத்துக்கு பயன்படுத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
15 ஆண்டுகளுக்கு அதிக பழமையான பேருந்துகளை இவ்வாறு திருத்தம் செய்ய உள்ளதாக அந்த சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பீ.கே. ஆரியரத்ன கூறினார். இதற்காக 3000 மில்லியன் ரூபா செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீள் திருத்தம் செய்தும் பயன்படுத்த முடியாத நிலையில் மேலும் 500 பேருந்துகள் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தள்ளார்..
Related posts:
வடக்கு மாகாணத் திணைக்களங்களுக்கு கணக்காளர்களை நியமிக்க நடவடிக்கை!
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்துவதற்கான தேவை இதுவரை ஏற்படவில்லை - நிதி இராஜாங்க அ...
கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் வீழ்ச்சி - உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு!
|
|