பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாட்டை மீண்டும் திறக்க வேண்டிய நேரம் இது – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, December 29th, 2020

கொரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை தொடரும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டுக்கு திரும்ப விரும்பும் அனைவரும் திரும்ப அழைத்து வரப்படுவார்கள் என்றும் இந்த நடவடிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதே நேரம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிக நீண்ட காலமாக மூடப்பட்டிருக்கும் எல்லைகளை கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து நாட்டை மீண்டும் திறக்க வேண்டிய நேரம் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த கொரோனா தொற்றினால் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல துறைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, நாட்டின் பொருளாதாரத்தையும் நாட்டின் எல்லைகளையும் மீண்டும் திறப்பதற்கும் அரசாங்கம் வழிகளைத் தேடி வருகிறது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: