8 ஆயிரம் மாணவர்கள் இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு !
Monday, July 1st, 2019ஆகஸ்ட், செப்ரெம்பர் மாதங்களில் கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை தற்போது இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 8 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். ஏனைய வருடங்களிலும் பார்க்க மாணவர்களின் எண்ணிக்கை இம்முறை 2 மடங்காக அதிகரித்திருப்பதாகவும் கூறினார்.
தற்போது இந்தக் கல்லூரிகளில் 4200 பேர் பயிற்சிகளைப் பூர்த்தி செய்துள்ளனர். இவர்கள் பிரதேச செயலக மட்டத்தில் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்னாயக்க மேலும் தெரிவித்தார்.
Related posts:
மானிய முறையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை : அமைச்சர் அர்ஜுன ரணதுங்க!
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 139 ஆவது பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில்!
அட்டவணைக்கு அமைய எரிபொருள் கிடைக்குமாயின் மின்விநியோகத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது - மின்சக்...
|
|