அடுத்த வாரம்முதல் பயணிகள் பேருந்தகளில் முற்கொடுப்பனவு அட்டை முறைமை நடைமுறை – போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு!
Saturday, June 20th, 2020
அடுத்த வாரம்முதல் பயணிகள் பேருந்தகளில் முற்கொடுப்பனவு அட்டை முறைமையை அறிமுகப்படுத்த இலங்கை போக்குவரத்து சபை ஆராய்ந்து வருகின்றது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் பேருந்துகளில் பயணிகள் கட்டணத்தை செலுத்தும் போது நடத்துனரிடம் பணத்தை கொடுப்பதற்கு பதிலாக ஏற்கனவே மீள்நிரப்பு செய்யப்பட்டுள்ள முற்கொடுப்பனவு அட்டைகளை பயன்படுத்தி பயணிக்க முடியுமாக இருக்கும் என்றும் போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது;
அத்துடன் இந்த முறைமையை தனியார் பேருந்துகளிலும் நடைமுறைப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின் மலேரியா நோயாளி – முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு யாழ்ப்பாணப் பி...
மக்களின் உயிர்களுடன் விளையாடும் யாழ். மாநகர சபை - நடவடிக்கை எடுக்கத் தயங்கும் உயர் அதிகாரிகள்!
|
|
|


