729 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் இன்று அழிப்பு!
Monday, April 1st, 2019
நாட்டில் கைப்பற்றப்பட்ட 729 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை சப்புகஸ்கந்தையில் உள்ள களஞ்சியசாலை தொகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(01) அழிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த நடவடிக்கைக்கான அரச இரசாயண பகுப்பாய்வின் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளல் என்பன நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் சமந்த கித்தலவஆராச்சி தெரிவித்துள்ளார்.
நீதவான்கள் முன்னிலையில் இந்த கொக்கேய்ன் போதைப்பொருளை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை விவகாரம் - கணக்காய்வாளர் திணைக்களத்திடம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...
இலங்கையில் நடைபெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி!
சிறுவர் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக மூன்று புதிய சட்டமூலங்களை நிறைவேற்ற திட்டம் - இராஜாங்க அமைச...
|
|
|


