60 கிலோவுடன் நபர் ஒருவர் கைது!

Wednesday, July 20th, 2016

மாதகல் பகுதியில் கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரிடமிருந்து 60 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

கைதுசெய்யப்பட்டவர் பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியை சேர்ந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கேரள கஞ்சா படகொன்றின் மூலம் கொண்டுவரப்பட்டு கரையில் இறக்கப்படும்போது மீட்கப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய வலையமைப்பு ஒன்று செயற்பட்டு வருவதாகவும், அது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள காங்கேசன்துறை பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜௌபர் தலைமையிலான பொலிஸ் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: