48 மணித்தியாலங்களுக்கு QR பதிவுகளை மேற்கொள்ள முடியாது – அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவிப்பு!
Saturday, August 6th, 2022புதிய பயனர்களுக்கான தேசிய எரிபொருள் அமைப்புக்கான QR பதிவுகளை அடுத்த 48 மணிநேரத்திற்கு மேற்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்துத் துறையின் திட்டமிட்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர ட்விட்டர் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
எனினும் ஏற்கனவே QR முறையில் பதிவுசெய்த பயனர்களுக்கு இதன் காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
ஏற்றுமதி துறையின் தடைகளை இனங்கண்டு தீர்ப்பதற்கு முழுமையான உதவியை வழங்க தயார் – ஜனாதிபதி அறிவிப்பு!
கிளிநொச்சியில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை !
நாட்டுல் மேலும் 4 டெங்கு மரணங்கள் பதிவு - , நோயாளிகளும் 50 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பி...
|
|