வாக்காளர் இடாப்பு மீளாய்வில் மக்களுக்கு விழிப்புணர்வு குறைவு!

Sunday, June 3rd, 2018

ஜீன் மாதம் முதலாம் திகதியிலிருந்து வாக்காளர் படிவங்கள் அந்தந்தப் பகுதிகளிலுள்ள கிராம சேவையாளரூடாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அவர்கள் ஒவ்வொரு வீடுகளுக்குச் சென்று வாக்காளர் படிவங்களை பூரணப்படுத்தல் வேண்டும்.

நடைமுறைச் சட்டத்தில் நிறையச்சிக்கல்கள் காணப்படுவதால் இதனை எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு கிராம அலுவலர்கள் சென்று சரியாக செயற்படாவிட்டால் பலர் விண்ணப்பிக்காமல் விட்டு விடுவார்கள். இதனால் ஒருவர் தன்னுடைய வாக்கைப் பிரயோகிக்காமல் விட்டால் ஒன்று இரண்டு வாக்குகளினால் தோற்றவர்களும் இருக்கின்றார்கள்.

வாக்காளர் இடாப்பு தேர்தலுக்கு மட்டும் பயன்படுத்துவதில்லை வதிவிடச் சான்றிதழை உறுதிப்படுத்துவதற்கு, பிள்ளைகளைப் பாடசாலையில் அனுமதிப்பதற்கு, அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நட்ட ஈடுகளுக்கு (வெள்ள அழிவுகள், இயற்கை அழிவுகள் போன்றவற்றுக்கு) அப்பகுதியில்தான் அவருடைய வீடுகள் அமைந்திருந்தது என்பதை உறுதிப்படுத்துவதற்கு, வீட்டுத்திட்டம் வழங்கும்போது, பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் போது வெட்டுப்புள்ளியைத் தீர்மானிக்கும் போது, அரசாங்கத்;தினால் வழங்கப்படும் வேலை வாய்ப்புக்களுக்கும் இவ்வாறு அனைத்துத் தேவைகளுக்குமே வாக்காளர் இடாப்பு முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

வாக்காளர் இடாப்பில் பெயர் உட்சேர்க்கப்படுவது தொடர்பாக மக்களிடமிருக்கின்ற விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. வழங்கப்பட்டுள்ள தேருநர்களைக் கணக்கெடுக்கும் படிவத்தை  முறையாகப் பூரணப்படுத்தி ஜீலை 31 ஆம் திகதிக்குள் ஒப்படைக்கப்படல் வேண்டும்.

தேர்தல் ஆணைக்குழுவானது தன்னுடைய மூலோபாயத் திட்டமிடல் மூலமாக ஒவ்வொரு பங்காளிகளையும் சந்தித்து தன்னுடைய செயற்பாடுகள் தொடர்பாக ஒரு விளக்கமளிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை நாட்டில் சகல பகுதிகளிலும் மேற்கொண்டு வருகின்றது.

Related posts: