இலங்கைக்கு சீனாவிலிருந்து அத்தியாவசிய மருந்துகள் – ஆறு மாத காலத்திற்கு தேவையான ரேபிஸ் தடுப்பூசிகளும் கிடைக்கப்பறுவதாக தெரிவிப்பு!

Saturday, September 24th, 2022

சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளை ஏற்றிய விமானம் இன்று நாட்டை வந்தடைத்துள்ளது.

இந்த மருந்துகளில் ஆறு மாத காலத்திற்கான ரேபிஸ் தடுப்பூசிகளும் அடங்குவதாக சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி

சிறுநீரக நோயாளிகள் மற்றும் புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய மருந்துகளும் இதில் உள்ளடங்குகின்றன.

சீன அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து சீனாவில் இருந்து பெறப்படும் மருந்து கையிருப்பு சுமார் ரூ.500 மில்லியன் மதிப்புடையது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: