4,104 பட்டதாரிகள் நேர்முகத் தேர்வுக்கு –  யாழ். மாவட்ட செயலர் தெரிவிப்பு!

Wednesday, April 25th, 2018

யாழ். மாவட்டத்தில் பதிவு செய்த 4 ஆயிரத்து 104 பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்குள் இணைப்பதற்கான நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றுக் காலை செய்தியாளர்களைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

இணையம் ஊடாக 3 ஆயிரத்து 425 பேர் பதிவு செய்திருந்தனர். அதனைவிட எங்குமே பதிவு செய்யாதோர் 779 பேர் யாழ். மாவட்ட செயலகத்தில் புதிதாகப் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். மொத்தமாக 4 ஆயிரத்து 104 பட்டதாரிகள் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

பதிவு செய்த அனைவருக்குமான நேர்முகப் பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நேர்முகப் பரீட்சைப் பணி நிறைவடையும். அவர்களுக்கு நேர்முகத் தேர்வின்போது புள்ளிகள் வழங்கப்படுகின்றன. அமைச்சின் அறிவுறுத்தலுக்கமையவே அந்தப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. அது தொடர்பில் குழப்பமடையத் தேவையில்லை என்றார்.

Related posts: