பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு எதிர்பார்ப்பு – வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தகவல்!

Monday, November 6th, 2023

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பண்டிகை காலத்தில் அதிகளவிலான பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையை அதிகரிக்காமல், தற்போதைய விலை மட்டத்தில் அல்லது அதனை விட குறைந்த விலையில் வைத்து கொள்வதற்கான வேலைத் திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

உலகின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3.6 சதவீதமாக அதிகரிக்கும் - பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி ...
பிரசாரத்திற்காக பயன்படுத்தும் நிதி குறித்து கண்காணிப்பதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான அமைப்ப...
நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான அந்நிய செலாவணிக்கு தற்போது தட்டுப்பாடு இல்லை - மத்திய வங்கி ஆளுந...