வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பிய இளைஞர் விபத்தில் பலி!

Tuesday, June 6th, 2023

யாழ்ப்பாணம் வரணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் மின்கம்பத்தில் மோதி  உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி  அம்மன்  ஆலயத்திற்கு சென்று விட்டு  வடமராட்சி கிழக்கு  குடத்தனை பகுதியில் உள்ள  தனது வீடு நோக்கி  பயணித்த இளைஞரே  மின் கம்பத்துடன் மோதி  உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம்  இன்று அதிகாலை  3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  

இதன்போது குடத்தனை பகுதியைச் சேர்ந்த நிறோஜன் என்ற 31 வயதான  இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் உடல் கூற்று சோதனைக்காக   பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

வடக்கில் மேலும் 74 பேருக்குக் கொரோனாத் தொற்று - மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!
பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு விரைவில் புதிய காணிகள் கிடைக்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி அறிவி...
மாணவர்களுக்கு மின்னஞ்சல் கணக்கு உருவாக்கும்போது பெற்றோரின் தகவல்களை உள்ளிட வேண்டாம் – பொலிஸ் குற்றப்...