33 வருடங்களை கடந்தும் மனதைவிட்டகலா குமுதினி படுகொலை நினைவேந்தல் நாள் இன்று!

Tuesday, May 15th, 2018

குறிகாட்டுவான் துறைமுகத்திற்கும் நெடுந்திவிற்க்கும் இடையில் குமுதினிப் படகில் பயணம் செய்த போது இலங்கை கடற்படையினரால் ஈவிரக்கமின்றி 36 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட துயரம் படிந்த  33 ஆவது நினைவு நாள் இன்று.

1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் காலை ஏழு மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் குமுதினி படகு தனது பயணத்தை வழமைபோல ஆரம்பித்தது. குமுதினிப்படகு அரை மணி நேரம் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தவேளை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு இந்த கோர கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்ட துயரம் நிறைந்த நாள் இன்று.

இந் நினைவு நாளை நெடுந்தீவின் மக்கள் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கொரோனா அபாயம் நீங்கவில்லை - மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள து சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிர...
குடிநீர் வசதி இல்லாத பாடசாலைகளுக்கு விரைவாக குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் – துற...
40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கண் பரிசோதனை மேற்கொள்வது அவசியம் - கண் மருத்துவர்கள் வலியுறுத்து!