ஜூலை 6 வரை சமையல் எரிவாயு விநியோகிக்கப்படாது – வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனம் கோரிக்கை!

Friday, June 24th, 2022

அடுத்த மாதம் 6 ஆம் திகதிவரை சமையல் எரிவாயு கொள்கலன்களை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை கோரியுள்ளது

எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதிமுதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இரண்டு கப்பல்களில் 7, 000 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டை வந்தடையவுள்ளது.

அந்த கப்பல்களில் உள்ள எரிவாயு கிடைக்கும் வரை கையிருப்பில் குறைந்தளவேனும் எரிவாயு இல்லை என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அடுத்த மாதம் 10 ஆம் திகதியின் பின்னர், 25,000 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய பாரியதொரு கப்பல் மாலைத்தீவு கடற்பகுதியை அண்மிக்கவுள்ளது.

அங்கிருந்து சிறு கப்பல்கள் ஊடாக தொடர்ச்சியாக எரிவாயுவை நாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த மாதம் ஐந்தாம் திகதியின் பின்னர், நாளாந்தம் 12.5 கிலோகிராம் நிறைக் கொண்ட 80,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: