30 வயதுக்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசி பெறாதவர்களைக் கண்டறிய பொலிஸார் சிறப்பு நடவடிக்கை!
Saturday, August 7th, 2021ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாதவர்களைக் கண்டறிய பொலிஸார் கொழும்பில் ஒரு சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போடாத 30 வயதுக்கு மேற்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை தடுப்பூசி போடுவதற்கு பொலிஸ் சமூக காவல் பிரிவு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் இன்னும் கொவிட் -19 க்கு எதிரான தடுப்பூசி போடாதவர்கள் சுகததாச விளையாட்டரங்கிற்குச் சென்று அவர்களின் முதல் டோஸைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கதிர்காமக் கந்தன் வருடாந்த மகோற்சவப் பெருவிழா ஆரம்பம்!
வழமை போன்று மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பதில் எவ்வித தடையும் இல்லை - கல்வி அமைச்சு அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் கடந்த 2 நாட்களில் 6 பேர் கொரோனாவால் மரணம் – தொற்றாளர் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைக் கடந...
|
|