யாழ்.வெற்றிலைக்கேணி சுண்டிக்குளம், நெடுந்தீவு ஆகிய கடற்பரப்புக்களில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் கைது
Thursday, March 2nd, 2017
யாழ்.வெற்றிலைக்கேணி சுண்டிக்குளம், நெடுந்தீவு ஆகிய கடற்பரப்புக்களில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் நேற்றுப் புதன்கிழமை(01) இரவு இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள 13 இந்திய மீனவர்களும் யாழ்.நீரியல் வளத் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த மீனவர்கள் அனைவரையும் யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெற்றிலைக் கேணி சுண்டிக்குளம் கடற்பரப்பில் வைத்து 09 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த மீனவர்களிடமிருந்து ஒரு படகும் மீட்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் 04 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து ஒரு படகும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.நீரி யல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஜே.சுதாகர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் தமிழ்நாட்டின் புதுக் கோட்டை, இராமேஸ்வரம், ஜகதாப்பட்டிணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:
அத்தியாவசியப் பொருட்களை குறைந்த நிறையில் உற்பத்தி செய்து ஏமாற்றும் மோசடி- பொருட்களை வாங்கும் போது அ...
பல்கலைக்கழக அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்ற நள்ளிரவுடன் நிறைவு!
திருகோணமலை கடலில் சிறிய ரக ஆளில்லா விமானம் மீட்பு !
|
|
|
திங்கள்முதல் மீண்டும் மின் துண்டிப்பு - இன்றும், நாளையும் இரவு வேளைகளில் மின்சார துண்டிப்பு அமுலாக்க...
கல்வித்துறை மறுசீரமைக்கப்படாவிட்டால், மாணவர்கள் உயர் கல்வியை விட்டு விலகி வேறு வழிகளில் ஈடுபடுவதை தவ...
நெடுந்தீவு மக்களின் அவசர தேவைகளுக்கு உடனடித் தீர்வு வேண்டும் - வடக்கின ஆளுநரிடம் ஈ.பி.டி.பி அவசர கோர...


