பல்கலைக்கழக அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்ற நள்ளிரவுடன் நிறைவு!
Friday, July 5th, 2024
பல்கலைக்கழக அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்று (05) நள்ளிரவுடன் முடிவடைகிறது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) துணைத் தலைவர் பேராசிரியர் சந்தன பி. உடவத்த கூறுகையில்,
இதுவரை 85,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான காலக்கெடு நீடிக்கப்படாது எனவும் தெரிவித்தார்.
விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் விருப்பமான பல்கலைக்கழகத்தை மட்டும் சனிக்கிழமை (06) முதல் மாற்ற முடியும்.
எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி வரை இணையத்தளத்தில் உரிய மாற்றத்தை மேற்கொள்ள முடியும் என பேராசிரியர் உடவத்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பாலித பெர்னாண்டோ நியமனம்
இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் அவசர நடவடிக்கை!
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தனிப்பட்ட அரசியலை விடுத்து அனைவரும் ஒன்றுபட வேண்டும் - அமைச்சர் ...
|
|
|


