கல்வியியல் கல்லூரிக்கு புதிய மாணவர்கள் இணைப்பு!

Tuesday, January 16th, 2018

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்ற 32 ஆயிரம் பேர் இவ்வாண்டில் கல்வியியல் கல்லூரிக்கு அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

எதிர்வரும் மார்ச் மாதத்தில் புதிய மாணவர்கள் உள்வாங்கப்படுவதாக கல்வி தலைமை ஆணையாளர் கே.எஸ்.பண்டார தெரிவித்துள்ளார்.

இம்முறை தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆரம்பக்கல்விக்காக பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

கல்லூரியில் பயிற்சிபெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் 3 ஆயிரத்து 500 ரூபாவிலிருந்து 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  தற்பொழுதுநாடுமுழுவதிலும் உள்ள 19 கல்வியியற் கல்லூரிகளில் 8 ஆயிரத்து 500 மாணவர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: