275 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் – சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் சந்திர எக்கநாயக்க தகவல்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 275 பேர்தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் சந்திர எக்கநாயக்க தெரிவிக்கையில் –
தற்போது 275 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். பலர் தடுப்புக்காவலில் உள்ளனர். இதேநேரம் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் சந்தேகநபர்களும் இவர்களுள் அடங்குவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் தற்போது 275 பேர் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சமுர்த்தி பயனாளிகள் தெரிவில் முற்றிலும் அரசியல் தலையீடா?
ஹெரோயினுடன் கைதான ஈரானியர்களை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி!
அரச ஊழியர்களுக்காக புதிய நடைமுறை!
|
|