ஜனவரியில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Monday, December 21st, 2020

ஜனவரி மாதத்தில் நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் நோயாளர்களின் எண்ணிக்கையும் பாரியளவில் அதிகரிக்கும் எனவும் அந்தச் சங்கத்தின் மருத்துவர் ஹரித அலுத்கே எச்சரித்துள்ளார்.

இதன்காரணமாக முதியோர் இல்லங்களை உரியமுறையில் நிர்வகிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன் முதியோர் இல்லங்களில் வைரஸ் பரவுவதை தடுக்கவேண்டும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

Related posts: