23204 பெண்கள் மாயம்? – பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித்தகவல்!

Sunday, March 14th, 2021

இலங்கையில் கடந்த 05 வருட காலப்பகுதியில் 23 ஆயிரத்து 204 பெண்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த காலப்பகுதியில் பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாடுகள் மூலமே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் கொழும்பு டாம் வீதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்ட தலையற்ற உடல் சார்ந்த விசாரணையின் ஆரம்பத்தில் பொலிஸார், உடலை அடையாளம் காண்பதற்காக பொதுமக்களை நாடியிருந்தனர்.

இதன்போது சுமார் 200 ற்கும் அதிகமான அழைப்புக்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளில் இருந்தும் பொலிஸாருக்கு கிடைத்திருந்தன.

இந்த நிலையில் பொலிஸாரின் பதிவுகளில் குறிப்பாக 2015 ஆம் ஆண்டுமுதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிக்குள் நாட்டில் 23 ஆயிரத்து 204 பெண்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் முறைப்பாடுகள் குவிந்திருக்கின்றன.

அத்துடன் 2020 ஆம் ஆண்டில் 3716 முறைப்பாடுகள் பதிவாகியிருக்கின்றன. அதன்படி 2019ஆம் ஆண்டில் 3425 முறைப்பாடுகளும், 2018ஆம் ஆண்டில் 3325 முறைப்பாடுகளும் பொலிஸாருக்கு கிடைத்திருக்கின்றன.

2017ஆம் ஆண்டில் 3617 முறைப்பாடுகள் கிடைத்துள்ள அதேவேளை 2016ஆம் ஆண்டில் 4420 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேவேளை 2015ஆம் ஆண்டிலேயே 4701 முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டள்ளதுடன் இதுவே அதிகூடிய முறைப்பாடாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது எனவும் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளில் சிலர் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் பொலிஸாரின் பதிவுப்புத்தகத்தில் அது குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் சுட்டிக் காடடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: