2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கியது அரச நிதி பற்றியக் குழு!
Saturday, November 11th, 20232024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அரச நிதி பற்றியக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் குறித்த குழு கூடியதுடன் 2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டிற்கான தொடர் மற்றும் மூலதனச் செலவினங்கள் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த முறை பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேலும் சில விடயங்கள் தொடர்பான மேலதிக தரவுகளை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான பாதீட்டு திட்ட முன்மொழிவுகள் முன்மொழிவுகளாக மட்டுப்படுத்தப்பட்டிருப்பது பிரச்சினையாக உள்ளதாக அரச நிதி பற்றியக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|